வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஈழமக்கள் ஐனநாயக கட்சி இன்று (21) காலை 11.30 மணியளவில் வேட்பு மனுவை தாக்கல் செய்தது.
ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் முகவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் அவர்களின் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் தமது வேட்புமனுவை கையளித்தனர்.
வவுனியா மாவட்டத்திலுள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காகவே இவ்வாறு இன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.