நீர்கொழும்பில் நாளை நீர் வெட்டு அறிவிப்பு!

xfbxfvb
xfbxfvb

நீர்கொழும்பை சுற்றியுள்ள சில பிரதேசங்களில் நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு பம்புகுளிய நீர் சுத்திகரிப்பு மத்திய நிலையத்தின் ஊடாக தொடர்ச்சியான நீர் விநியோகத்தை பெற்றுக் கொடுப்பதற்காக கடான திட்டத்தின் ஊடாக மின்சார ஜெனரேட்டர் ஒன்றை பொருத்தும் பணிகள் காரணமாக இது மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப் பகுதிகளிள் நீர் வெட்டு அமுல்ப்படவுள்ளது கொச்சிக்கடை, தூவ, பிடிபன, துன்கால்பிட்டிய, பாசியாவத்த, பமுனுகம பிரதேசம், கடான அதிகாரத்திற்குற்பட்ட பிரதேசத்தின் ஒரு பகுதி, கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயம், கட்டுநாயக்க விமான படை முகாம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்கு இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.