அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களிற்கான இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனவரி 28ம் திகதி முதல் பெப்ரவரி 3ம் திகதி வரை அவர் இந்தியா நேபாளம் கட்டார் இலங்கைஆகிய நாடுகளிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது
இலங்கைக்கான தனது விஜயத்தின்போது அவர் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவை வழங்குவார்.