வடமாகாணத்தின் 18 மனிதநேய ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு!

IMG 20230224 163641 1
IMG 20230224 163641 1

வடமாகாணத்தில் மக்களுக்கான மனிதநேய பணியாற்றிவருகின்ற மனிதநேய ஊடகவியலாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது

IMG 20230224 WA0036 1
IMG 20230224 WA0036 1


அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பினால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட இந்த கௌரவிப்பு நிகழ்வில் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மனித நேயத்தோடும் அர்ப்பணிப்போடும் தமது கடமைகளை வகைப்பொறுப்போடு முன்னெடுத்துவரும் தெரிவுசெய்யப்பட்ட வடக்கு மாகாண ஊடகவியலாளரளே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர் .

IMG 20230224 WA0041


வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 18 ஊடகவியலாளர்களே இவ்வாறு கௌரவிக்கப்பட்டுள்ளனர்
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், வவுனியா மாவட்டத்தின் ஊடகவியலாளர் பாலநாதன் சதீசன் , கிளிநொச்சி மாவட்டத்தின் ஊடகவியலாளர் கதிரவேலு இரவீந்திரராசா, மன்னார் மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான றொசேரியன் லெம்பேட் மற்றும் யூட் பெலிஸ்ரஸ் பச்சேக் ஆகியோரும் , யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊடகவியலாளர்களான தம்பித்துரை பிரதீபன் ,முருகப்பெருமான் மதிவாணன், விஜயகுமார் லோஜன், இளயகுட்டி சாரங்கன், நடராசா குகராஜ், தங்கவேல் சுமன், கந்தசாமி பரதன், சுமித்தி தங்கராசா, சோபிகா பொன்ராஜ் ,தங்கராசா காண்டீபன் ,இந்ரபாலா வினோஜித் , குமாரசாமி செல்வக்குமார், சிங்காரவேலு நிதர்சனம், ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.