வவுனியா குட்செட்வீதியில் இரு சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேர் அண்மையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். அவர்களது இறுதிச்சடங்குகள் பலரது கண்ணீருக்கு மத்தியில் இன்று இடம்பெற்றது.
குறித்த சம்பவத்தில் குடும்பத்தலைவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் ஏனையவர்கள் படுக்கையில் உறங்கியபடியும் சடலங்களாக அவதானிக்கப்பட்டனர்.
சம்பவம் தொடர்பாக வவுனியா காவற்துறையினர் மற்றும் தடயவியல் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சடலத்தை பார்வையிட்ட வவுனியா நீதவான் அதனை உடற்கூற்று ஆய்வுக்கு உட்படுத்துமாறு காவற்துறையினருக்கு பணித்திருந்தார்.
உடற்கூற்று பரிசோதனையின் முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நால்வரதும் இறுதிச்சடங்குகள் நூற்றுக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் குட்செட்வீதி உள்ளக வீதியில் அமைந்துள்ள அவர்களது இல்லத்தில் இடம்பெற்று வெளிக்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.