ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு அழைப்பு!

slfp
slfp

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களையும் கொழும்பிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பாளர்களுடனான சந்திப்பு எதிர்வரும் 7ஆம் நாள் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசே தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன் போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி போட்டியிடும் முறை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான உடன்படிக்கை ஆகியன தொடர்பாக கலந்துரையாடுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தவிர, அனைத்துத் தொகுதிகளுக்கும் அமைக்கப்படவுள்ள தேர்தல் குழுவொன்றின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.