வவுனியா குளத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டது.
வவுனியா குளத்தின் வான் பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்த பொதுமக்கள் அது தொடர்பாக காவற்துறையினருக்கு தெரிவித்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் சடலத்தை மீட்டுள்ளதுடன், விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசிவருவதால் ஒருசில நாட்களுக்கு முன்னரே அவர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை