வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு

bus
bus

வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நாளையதினம் (25) இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு தெரிவித்துள்ளது. 


இன்று வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைமையத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே நாளை இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கான ஆதரவை வழங்குவது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. 


குறித்த கூட்டத்தில் வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் சி. சிவகரன், யாழ் பிராந்திய கூட்டு இணைக்கப்பட்ட பஸ்  கம்பனிகளின் இணையத்தின் தலைவர் பொ.கெங்காதரன், முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நா.சற்குணராசா, மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பு. நாகரூபன், வவுனியா மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். ரி. ராஜேஸ்வரன், கிளிநொச்சி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தி. கிருஷ்ணன் ரூபன் ஆகியோர் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.