இமானுவேல் ஆனோல்ட் பிணையில் விடுவிப்பு

யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் மீண்டும் பொறுப்பேற்பு
யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவல் ஆர்னோல்ட் மீண்டும் பொறுப்பேற்பு

யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் அவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண காவல் நிலையத்தில் தனது சட்டத்தரணியுடன் யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் இன்று(17) காலை சரணடைந்தார். அதன்பின்னர் அவரை ​காவற்துறையினர் கைது செய்தனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்குச் சென்றபோதே இமானுவேல் ஆனோல்ட்  காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதலை யாழ். மாநகர முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோலட் மேற்கொண்டதாக காயமடைந்தவர் காவற்துறையினருக்கு வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.