தாண்டிக்குளத்தில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

IMG 20230601 084759
IMG 20230601 084759

தாண்டிக்குளம்  பகுதியில் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (31.05) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.


தாண்டிக்குளம் – ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த பாலசிங்கம் சுரேஸ் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றையதினம் இரவு உணவருந்திவிட்டு நித்திரைக்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார். 


இரவு தூக்கத்தில் இருந்து கண் விழித்த மனைவி கணவனை நீண்ட நேரம் காணாததால் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்த போது வீட்டின் முன்புறமாகவுள்ள வேம்பு மரத்தில் தூக்கில் தொங்குவதை அவதானித்துள்ளார். பின்னர் அயல் வீட்டாரின் உதவியுடன் வவுனியா காவற்துறையினருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் மற்றும் காவற்துறையினர் சடலத்தை மீட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தடயவியல் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.