ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் எதிர்வரும் 26ஆம் 27ஆம் திகதிகளில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினை மற்றும் கற்பிக்கும் காலத்தில் சுதந்திரத்திற்கு இடையூறு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் அதிபர்களின் 30 தொழிற்சங்கங்கள் ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.
இதேவேளை பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள தொடர்ச்சியான போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.