கனிமொழியின் இலங்கை வருகை- அரசுடன் பேச்சு

Kanimoli
Kanimoli

தமிழக முன்னாள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதியின் மகளும் தமிழக அரசியல்வாதியுமான கனிமொழி கருணாநிதி கொழும்பில் அரசு மற்றும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இன்று கொழும்பில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தார். இதில் அமைச்சர் ரவுஃப் ஹக்கீமும் கலந்து கொண்டார்.

கனிமொழி இலங்கை கடற்றொழில் மற்றும் நீர்வள மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலிப் வேதாராச்சியுடன் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவது குறித்தும் கலந்துரையாடியிருந்தார்.

இலங்கைக் கடலில் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இந்தியாவும் இலங்கையும் பல சுற்று விவாதங்களை நடாத்தியுள்ளன. ஆனால் இந்த பிரச்சினை இன்னும் தீர்க்கப்படவில்லை.

இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை பெரும்பாலும் கடலில் தாக்குவதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில் இலங்கை கடற்படை அக்குற்றச்சாட்டினை மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்று வியாழக்கிழமை கனிமொழி கொழும்பில் அமைச்சர் ரவூஃப் ஹக்கீமின் மகளின் திருமணத்திலும் கலந்து கொண்டிருந்தார்.