டுபாய் நிறுவனத்தின் தண்ணீர் போத்தல்களிற்கு தடை!

srilankan airlines
srilankan airlines

டுபாய் நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்படும் தண்ணீர் போத்தல்களை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

டுபாய் நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்படுகின்ற ஒரு போத்தல் தண்ணீரின் விலை 7.80 அமெரிக்க டொலராகும்.

ஒரு வருடத்திற்கு 3 மில்லியன் தண்ணீர் போத்தல்களை ஸ்ரீலங்கன் நிறுவனம் பெற்றுக் கொள்கின்றது.

அதற்கமைய உள்ளூர் நிறுவனத்திடம் பொருத்தமான சிறிய போத்தல் மற்றும் நீரை கொள்வனவு செய்து பயணிகளிடம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கன் நிறுவனம் கொள்வனவு செய்யும் அனைத்து பொருட்களிலும் உள்ளூர் உற்பத்திற்கு முதன்மை இடத்தை வழங்குமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.