இடையூறின்றி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

Gotabaya Rajapaksa 1
Gotabaya Rajapaksa 1

மக்களுக்கு இடையூறு இன்றி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு பரிசோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களில் அதிகளவான மக்கள் பாதிக்கப்படும் வகையில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி நள்ளிரவு நேரங்களில் வருகின்ற பேருந்துகள் இடைநடுவே நிறுத்தப்பட்டு பெண்கள், முதியோர், சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் பரிசோதிக்கப்படுகின்றார்கள்.

அதே நேரத்தில் பெண் பரிசோதகர்கள் இல்லாமையால் பெண்களின் பைகளை இரணுவத்தினர் பரிசோதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

எனவே பொது பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் பாமர மக்கள் துன்பப்படுத்துகின்ற செயற்பாடுகளை உடனடியாக அரசாங்கம் நிறுத்தி மனித நேயத்துடன் செயற்பட வேண்டும் என்று சிவில் சமூகப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே குறித்த விடயத்தில் மனித உரிமை ஆணைக்குழு செயற்பட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அமைப்புக்கள் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.