சிங்கள மாணவர்கள் தங்கியிருந்த வீட்டில் வாள் மீட்பு

jaffna police
jaffna police

யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றிலிருந்து வாள் மீட்கப்பட்டுள்ளதுடன் எவரும் கைது செய்யப்படவில்லை என யாழ் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பரமேஸ்வரா சந்திக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் இன்று (9) காலை இடம்பெற்றது.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மேற்தளத்தில் வாள் ஒன்று இருப்பதாக வீட்டு உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த வாள் மீட்கப்பட்டது.

எனினும் அது தொடர்பில் தமக்குத் தெரியாது என அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது” என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.