கெகிராவ-பழைய வாவி பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு(வெள்ளிக்கிழமை) 10 மணியளவில் காட்டு யானை தாக்கியுள்ளதாகவும், சம்பவத்தில் பலியானவர் கெகிராவ-மரதன்கடவல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.