எரிபொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்பு – பந்துல குணவர்தன

petroட
petroட

எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (15) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எரிபொருள் விநியோகத்தில் நட்டத்துடனேயே அரசாங்கம் செயற்படுகிறது.

அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலை காரணமாக எரிபொருள் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கத்துக்கு முடியாதுள்ளது.

இதனால், எதிர்வரும் நாட்களில் அரசாங்கத்துக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டி ஏற்படும்” என தெரிவித்தார்.