மழையுடன் கூடிய வானிலை தொடரும்; மண்சரிவு எச்சரிக்கைகள்

weather
weather

இலங்கை முழுவதும் நிலவும் மழையுடன் கூடி வானிலை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என்று வளிமண்டவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.

மேற்கு, சபராகமுவா, தெற்கு, மத்திய, வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையினால் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளது என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இலங்கையின் பிற இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் இன்று காலை நிலவரப்படி இரத்னபுரி, நுவரெலியா, கேகல்லே மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு மண்சரிவு குறித்த ஆரம்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.