ரஜிகாந்த் இலங்கை வருகை – விசா மறுப்பு தொடர்பில் இலங்கை அரசு விளக்கம்

Rajinikanth
Rajinikanth

ரஜினிகாந்திற்கு விசா மறுக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் அரசியல் ரீதியான பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறித்த செய்தியினை மறுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்.

“இவ்விடயம் தொடர்பில் இந்தியாவின் சென்னை மற்றும் புதுடெல்லி ஆகிய இரு உயர்ஸ்தானிகராலயங்களிலும் நாம் விசாரித்தோம். அவ்வாறான எவ்வித சம்பவங்களும் இடம்பெறவில்லை என்பது இதன்போது உறுதி செய்யப்பட்டது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமிருந்து எமது உயர்ஸ்தானிகராலயங்களுக்கு எவ்வித விசா கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

ரஜினிகாந்துக்கு விசா வழங்க மட்டோம் என இலங்கை வெளிவிவகார அமைச்சு எந்த சந்தரப்பத்திலும் கூறவில்லை’ என தெரிவித்தார்.