சுதந்திர கட்சி ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக தீர்மானம்

slfp and gotabaya
slfp and gotabaya

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதற்கு நேற்று (16) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பொது தேர்தலில் 3 இல் 2 பெரும்பான்மை பெறுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.