கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமாகக் கூறப்படும் தாமரைக் கோபுரம் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது.
சீன வங்கியான எக்சிம் வங்கியின் சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியுதவியில் குறித்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.