புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்தியதற்காக இலங்கையில் இருந்து நாடு கடத்தப்பட்டகோவென்ட்ரியைச் சேர்ந்த நவோமி கோல்மேன் என்ற பெண் 8 இலட்சம் இலங்கை ரூபாவை இழப்பீடாக பெற்றுள்ளார்.
கோவென்ட்ரியைச் சேர்ந்த நவோமி கோல்மேன், கடந்த ஏப்ரல் மாதம் 2014 ஆம் ஆண்டு புத்தரின் உருவத்தை கையில் பச்சை குத்தியதற்காக கைது செய்யப்பட்டு நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் நாடு கடத்தப்பட்டார்.
தற்போது இலங்கை உச்ச நீதிமன்றம் அவருக்கு ஏற்பட்ட மன கஸ்டம் மற்றும் அவதூறு ,உடல்நல பாதிப்பு தொடர்பில் கூறியதுடன், அவரது உரிமைகள் மீறப்பட்டதாக தீர்ப்பளித்தது.
திருமதி கோல்மன், ஒரு மனநல தாதியாவர் , அவர் இங்கிலாந்து திரும்பிய பின்னர் இலங்கை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தார் என்பது குறிப்பிட தக்கது.