பிரதமர் என்ன கூறுகின்றாறோ அதைத்தான் சம்மந்தன் ஐயா சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்கள் – எஸ்.வியாழேந்திரன் குற்றச்சாட்டு

amal
amal

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஸ்ணுமூர்த்தி ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா ஆலய பிரதமகுருக்கள் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.

அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன், ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர், உறுப்பினர்கள், ஏறாவூர் நகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் விரைவில் இவ் ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஸ்ணுமூர்த்தி ஆலய கட்டுமான பணிக்கான உதவிகளைப்புரிய முயற்சிப்பதாகவும், விரைவில் நாம் ஒரு சிறந்த நிலைக்கு வருவோம் அந்நேரம் ஆலயத்திற்கான முழுமையான கட்டுமானத்திற்கான உதவிகளையும் செய்வேன் எனவும் கூறினார்.

எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் கூட்டமைப்பின் நிலைப்பாடு. கிழக்கில் தமிழர் இருப்பு தொடர்பில் தனது அதிருப்தியினை தெரிவித்திருந்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்ன கூறுகின்றாறோ அதைத்தான் சம்மந்தன் ஐயா சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்கள் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நூறுவீதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் அல்லது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாரைக் கை காட்டுகின்றாரோ அவருக்குதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் இதுதான் உண்மை இதுதான் யதார்த்தம் இதற்கு தழிழ்தேசிய கூட்டமைப்பு கூட்டங்களையும் நடாத்த தேவையில்லை பிரச்சாரங்களை நடாத்த தேவையில்லை. யாருக்கு ஆதரவு என இன்னும் மக்களை திசை திருப்ப தேவையற்ற கூட்டங்கயும் பிரச்சாரங்களையும் மேற்கொள்கின்றனர் என தெரிவித்திருந்தார்.

தற்போது இங்கு நான் இங்கு பேசிக்கொண்டிருக்கின்ற செங்கலடி ஐயங்கேணியில் இக்கிராமத்தில் இன்னும் 15 வருடத்தில் யார் இருப்பார் என்பதே கேள்விக்குறி நாம் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்காவிடின் தமிழரின் இருப்பே கேள்விக்குறியென தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றினார்.