எழுக தமிழ் பேரணியில் சிறிதரன் பங்கேற்பு!

sritharan elluka tamil
sritharan elluka tamil

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற எழுக தமிழ் பேரணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பங்கேற்றார். அவருடன் கிளிநொச்சி மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவரை இந்த பேரணியில் பார்க்க முடியும் என்று நம்புவதாகவும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்றைய பேரணியில் பங்கேற்காத நிலையில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் பங்கேற்றார்.

தமிழ் மக்கள் பேரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காத போதும், அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும், அரசியல் சார்பின்றி இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.