புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள்

parliment
parliment

புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

சாந்த பண்டார, மனோஜ் சிறிசேன, டீ.பி.ஹேரத் ஆகியோரே புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார அண்மையில் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்துஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு மீண்டும் அவரையே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நியமித்தது. சாலிந்த திசாநாயக்க காலமானதைத் தொடர்ந்து டீ.பி.ஹேரத்தும் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர காலமானதால் ம​னோஜ் சிறிசேனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.