2வது நாளாகவும் தொடர்ந்த இ.போ.ச ஊழியர்களின் வேலை நிறுத்தம்

batti
batti

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் நாடளாவிய ரீதியில் இரண்டாவது நாளாகவும் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம், அகில இலங்கை மோட்டார் ஊழியர் சங்கம் இணைந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

அந்தவகையில் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு சாலை உத்தியோகத்தர்கள் தங்களுடைய வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அதிகரிக்கப்பட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் வழங்காமல் உள்ளது கவலையளிக்கின்றது. எனவே எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தினை உடனடியாக வழங்க வேண்டும். இல்லையேல் எங்களது போராட்டம் தொடரும் போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பணிப் பகிஷ்கரிப்பால் பெருந்தொகையான பயணிகள், பஸ் தரிப்பு நிலையத்தில் நிறைந்து காணப்படுகின்றனர். நீண்ட தூரம் பயணிக்கும் மாணவர்கள், பெண்கள், வயோதிபர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.