பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனத்திலிருந்து கரு ஜயசூரிய விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, கரு ஜயசூரியவின் பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து தன்னுடைய சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் இரண்டுடொரு நாட்களில் அல்லது அடுத்தமாதம் முதல் வாரத்தில் முக்கிய அறிவிப்பை விடுப்பார் என அறியமுடிகின்றது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை அடுத்தே ஐக்கிய தேசியக் கட்சியின் சிக்கல் தீர்க்கப்படுமென அறியமுடிகின்றது.
அதற்குப் பின்னரே கருஜயசூரிய முக்கிய அறிவிப்பொன்றை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.