ராஜிதவின் சீராய்வு மனு மீதான விசாரணை மார்ச் 5ம் திகதி!

rajitha mp
rajitha mp

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் சீராய்வு மனுவை மார்ச் மாதம் 5ம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சீராய்வு மனு மீதான விசாரணை கடந்த 17 ஆம் திகதி கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு இன்றைய தினம் (21) அது தொடர்பான விசாரணை இடம்பெற்றிருந்தது.

சர்ச்சைக்குரிய வெள்ளை வான் விவகாரத்துடன் தொடர்புடைய ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் பின்னர் அவரை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்திருந்தது.

இதனையடுத்து ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக சட்டமா அதிபரினால் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.