கடந்த 2 மாதங்களில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்குழு உறுப்பினர் விஜேநந்த குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
“நாட்டில் நிலவிய மழையுடனான வானிலை காரணமாக கடந்த 2 மாதங்களில் மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கரட், கறிமிளகாய், தக்காளி, போஞ்சி உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
எதிர்வரும் இரண்டு, மூன்று மாதங்களில் மரக்கறிகளின் விலை மீண்டும் வீழ்ச்சியடையும்” என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.