யாழ் சுண்டுக்குழியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக தமக்கான நியமனத்தை வழங்க கோரி தொண்டர் ஆசிரியர்கள் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் திருமதி பீ.எச்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
ஆயினும் சந்திப்பில் தமக்கு சாதகமான பதில்களை ஆளுநர் வழங்கவில்லை என்றும் ஆளுநரின் பதில்கள் அதிருப்தியை ஏறபடும்தியிருப்பதாகவும் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை தாம் முன்னெடுக்க போவதாக தொண்டர் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.