யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவி கழுத்தறுத்துக் கொலை!

murder
murder

யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (22) பண்ணை கடற்கரையில் இடம்பெற்றது.

குறித்த கொலையாளி பரந்தன் இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும் தெரிய வருகிறது.

மாணவியை கொலை செய்து விட்டு, கொலையாளி தப்பி சென்றதாகவும் இதன் போது அப்பகுதியில் கடமையிலிருந்த விமானப்படை புலனாய்வு பிரிவினரால் கொலையாளி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் இருவருக்குமிடையில் காதல் இருந்துள்ளதாக தெரிய வருகிறது. யாழ்.பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.