ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

Mahinda Deshapriya
Mahinda Deshapriya

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று அறிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் மனுத்தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்தார்.