அம்பாறையில் பொலிசாரால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள்

.jpg
.jpg

அம்பாறை – பாலமுனை பகுதியில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் மற்றும் வெடிபொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

தேசிய புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே அவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் குறித்த வெடிபொருட்கள் ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் பயன்படுத்தியதாக இருக்கலாம் எனும் சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.