கல்முனை இளம் பட்டதாரிகள் அமைப்பினால் 2019 இல் கா.பொ.த.சாதாரண தரம் எழுதிய மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கான ஊக்குவித்தல் கருத்தரங்கு கல்முனை ஆஸாத் பிளாசா மண்டபத்தில் நேற்று(22) நடாத்தப்பட்டது.
இந்நிகழ்விற்கு வளவாளர்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களான எச்.எம்.நிஜாம்,எவ் எச்.சிப்லி, அஹமட் றிஷாத் ஆதம் லெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் உயர்தரத்தில் தங்களது அடைவு மட்டங்களை எவ்வாறு அதிகரித்துக்கொள்வது மற்றும் பல்கலைக்கழக நுழைவை எவ்வாறு உறுதிப்படுத்திக்கொள்வது எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்,
இந்நிகழ்விற்கு கல்முனை பிராந்தியத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட சுமார் 120 பேர் கலந்து சிறப்பித்தனர்.