ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்று

unp meeting
unp meeting

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற பங்காளி கட்சிகளுக்கிடையிலான கூட்டம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதன்போது புதிய கூட்டணி மற்றும் ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை இலங்கையின் முதன்மைக்கட்சிகள் அறிவித்து வருகின்ற போதும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்திருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாத நிலைலேயே இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகிய மூவரும் விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.