புகையிரத சேவை ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் சுழற்சி முறையிலான பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை தெரிவித்தனர்.
மேலும் சம்பள பிரச்சினைகள் மற்றும் பிற கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த செவ்வாய்க்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.