நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

Screenshot 20200128 093111 696x370
Screenshot 20200128 093111 696x370

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயக் கேணியில் சிறுவன் ஒருவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று(28) காலை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் கேணியில் சிறுவனின் சடலம் இருப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .