சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் சுதந்திர தினத்தன்று மதுபான விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.