நிரந்தர வீடில்லாத குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு தமக்கென்று வீட்டை நிர்மாணித்து கொள்ளும் நோக்கில் முதலாவது வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(01) முல்லைத்தீவில் இடம்பெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின், முல்லைத்தீவு மாவட்ட முகாமையாளர் விஜித கமகே இன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
குறித்த நிகழ்வில் மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர்கள்,தொழில்நுட்ப உதவியாளர்கள், அரசியல் பிரமுகர்கள்,மதகுருமார்கள், பிரதேச மக்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.