12 வது நாளான தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (20.09.2019) கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலிருந்து மு.ப 10.30 மணியளவில் ஆரம்பித்து செங்கலடி வரை பேரனியாக சென்று மீண்டும் பல்கலைக் கழகத்தை வந்தடைந்தது.
அனைத்து பொதுத்துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 107% அதிகரித்துள்ளது. ஆனால் பல்கலைக்கழக கல்விசாரா மற்றும் நிர்வாக ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 92% மட்டுமே அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகக் கருதி அனைத்து பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் குறித்த பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.