கோட்டாபயவின் தேர்தல் பிரசார காரியாலயம் திறப்பு

ampara 1
ampara 1

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை நகரில் பிரதான தேர்தல் பிரசார காரியாலயம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை(20.09.2019) முற்பகல் 11 மணியளவில் இக்கட்சி காரியாலயத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பேருகொட மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க. சிங்கள, முஸ்லீம் மக்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கருத்து தெரிவித்த அதிதிகள் கோத்தபாய ஜனாதிபதி ஆனால் நாட்டின் நிர்வாக கட்டமைப்பு சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சிலர் தனது சுயநலத்திற்காக உண்மையை மறைக்க முடியாது. எமது மக்கள் தெளிவடைந்துள்ளார்கள் என்பதை எதிர்கால தேர்தலில் உணர்த்துவார்கள் என குறிப்பிட்டனர்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச சார்பில் ஜெயந்த கேதகொட, சிறிபால அமரசிங்க மற்றும் டாக்டர் அஜந்தா பெரேரா ஆகியோர் தேர்தல் ஆணையகத்தில் கட்டுப்பணத்தினை 19.09.2019 அன்று செலுத்தியுள்ளனர்.