30 வருடங்களின் பின் ஞானவைரவர் ஆலய தோ் திருவிழா!

84525138 630762654354727 675573986016362496 n 1080
84525138 630762654354727 675573986016362496 n 1080

யாழ்.காங்கேசன்துறை- மாம்பிராய் ஞான வைரவா் ஆலயத்தின் வருடாந்த தோ் திருவிழா 30 வருடங்களின் பின் நேற்று(09) இடம்பெற்றது.

1990ம் ஆண்டு இராணுவ நடவடிக்கை காரணமாக 28 ஆண்டுகள் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உயர்பாதுகாப்பு வலயமாக வைக்கப்பட்டிருந்தது.

2018ம் ஆண்டு மக்களை மீள் குடியேற்றத்திற்காக இப் பகுதி விடுவிக்கப்பட்டிருந்தது, அதன் போது மாம்பிராய் ஞானவைரவர் ஆலயம் இடித்து அழிக்கப்பட்டுருந்தது.

அழிக்கப்பட்ட ஆலயத்தை அப் பகுதி மக்கள் தமது சொந்த முயற்சியிலும், புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களதும் நிதிப்பங்களிப்பிலும் புதுப் பொலிவுடன் கட்டி முடிக்கப்பட்டது.

கடந்த 29ம் திகதி எண்ணைக் காப்பு சார்த்தி 30ம் திகதி கொடியேற்றத் திருவிழா ஆரம்பமானது.

நேற்று பதினொராம் நாள் தேர்த் திருவிழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேரில் மாம்பிராய் ஞானவைரவர் ஏறி வலம் வந்த காட்சி அம் மக்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்க, அரோகராச் சொல்லி ஆர்ப்பரிக்க தேர்த் திருவிழா இனிதே நிறைவுற்றது.