சஜித்தை விட்டு மாற்று அணியில் இணையும் முக்கிய அமைச்சர்!

malik 1
malik 1

சஜித் பிரேமதாச தலைமையிலான ஒரு குழு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட பலர் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதிலிருந்து பின்வாங்கி ரணில் விக்ரமசிங்கவின் அணியில் இணைய தயாராகி வருவதாக தெரியவருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஏற்றுமதியாளர்களுக்காக விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்ட சில வர்த்தகர்கள் அரசியல் நிலைமைகள் குறித்து மலிக் சமரவிக்ரமவிடம் விசாரித்த போது “அது நடக்கும் வேலையல்ல. தேசிய அரசியலில் அரசியல் சிறுப்பிள்ளைகளுடன் எதனையும் செய்ய முடியாது. ரணிலின் அரசியலுக்கும் சஜித்தின் அரசியலுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்பதை நான் தற்போது புரிந்துக்கொண்டேன்” எனக் கூறியுள்ளார்.

இதனிடையே அமைச்சர் மலிக் சமரவிக்ரம, தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் கண்டிக்கு புறப்பட்டுச் சென்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை சந்தித்து விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த அவர்கள் இருவரும் அவசரமாக கண்டிக்குச் செல்லதாக கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர், கண்டி வட்டபுளுவில் உள்ள மலிக் சமரவிக்ரமவின் வீட்டில் ரணில் விக்ரமசிங்க இராப்போசன விருந்தில் கலந்துக்கொள்ள உள்ளதாகவும் தெரியவருகிறது.

மலிக் சமரவிக்ரமவின் இந்த பேச்சு மற்றும் அவரது செயற்பாடுகள் சந்தேகத்தினையும் சஜித்தின் அணியிலிருந்து ரணிலின் பக்கம் சென்றுள்ளார் என்றே எண்ணத்தோன்றுகிறது.