தேர்தலுக்கு இடையூறான இடமாற்றங்களைத் தவிர்க்கவும்- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தல்

election 1
election 1

பொது நிர்வாக அமைச்சினால் எந்த ஒரு இடமாற்றங்களையும் தற்போது மேற்கொள்ள வேண்டாம் எனவும் இவ்வாறான இடமாற்றங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையூறாக அமையும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிராமசேவகர்கள் தற்போது சேவையாற்றும் இடத்திலேயே தொடர்ந்தும் பணிபுரிவதற்கும் ஓய்வுபெறவுள்ள மாவட்ட செயலாளர்களுக்கு சேவை நீடிப்பு வழங்குவதற்குமுறிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் பொது நிர்வாக அமைச்சிற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது .

அவ்வாறு இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்பதனால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.