கடமைக்கு வந்த முதல் நாளே பலியான பொலிஸ் அதிகாரி!

90 5
90 5

மஸ்கெலியா – நல்லத்தண்ணி பிரதான வீதியின் மவுசாகலை சோதனைச் சாவடிக்கருகில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இதன்போது மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்த 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அஜித் வீரசிங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியாவிலிருந்து, நல்லத்தண்ணி நோக்கி சென்ற தனியார் போக்குவரத்து பேருந்து வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சிவனொளிபாதமலை பருவ காலத்தை முன்னிட்டு விசேட கடமை நிமிர்த்தம் இன்று முதன் நாளாக மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் பெயர் பதிவு செய்து விட்டு இரவு நேர கடமைக்காக மவுசாகலை பொலிஸ் சோதனைச் சாவடிக்கு சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் மஸ்கெலியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சாரதிக்கு மத்திய மாகாண போக்குவரத்து அதிகாரசபையினால் வழங்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லையெனவும், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி மற்றும் மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.