சின்னம் தொடர்பாக நாளை இறுதி தீர்மானம்

1 red 1
1 red 1

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் சின்னம் தொடர்பாக நாளை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடுவதற்கு அனைவரும் இதன்போது இணக்கம் தெரிவித்ததாக ரஞ்சித் மத்துமபண்டார குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பான யாப்பினை அனைவரும் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.