பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசியில் உரையாடியதன் ஊடாக அவருடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்க சதித் திட்டம் தீட்டியதாக கூறப்படும் விடயம் தொடர்பிலேயே பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபரினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
எனினும் தன்னை கைது செய்வதை தடுத்து இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, கிஹான் பிலப்பிட்டிய மேன்முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இதனை ஆராய்ந்த நீதவான் நீதிமன்ற உத்தரவின்றி கிஹான் பிலப்பிட்டிய கைதுசெய்ய முடியாது என்று அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.