வறுமையான குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்குங்கள் – சம்பிக்க

1 Patali
1 Patali

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொழிலின்றி கஸ்டப்படும் வறுமையான குடும்பங்களுக்கு அரசாங்கம் 10 ஆயிரம் ரூபாவை வழங்கவேண்டும் என்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இலங்கை சனத்தொகையில் பாதியளவிலானோரின் நிதி முடக்கலுக்கு உள்ளாகியுள்ளனர் எனவும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவசரமாக ஊரடங்கு அமுல்செய்யப்பட்டமையால் பல குடும்பங்கள் தமது குடும்பங்களுக்கு தேவையான அத்தியாசிய பொருட்களை கொள்வனவு செய்யமுடியவில்லை.

சில குடும்பங்களின் உறுப்பினர்கள் தமது தங்கநகைகளை அடகுவைத்து பொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.

இந்தநிலையில் ஊரடங்கு காரணமாக அவர்கள் தமது தொழில்களை செய்யமுடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.