கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம்

1 dse
1 dse

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட வலைத்தளம் இன்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த விசேட வலைத்தளம் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமான கலாமதி பத்மராஜாவினால் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பாக மட்டக்களப்பு கொரோனா தடுப்பு செயலணியின் www.covid19.batticaloa.dist.gov.lk என்ற வலைத்தளம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதுகுறித்து, கலாமதி பத்மராஜா தெரிவிக்கையில், “கொரோனா தடுப்பு செயலணியினையும் பொதுமக்களையும் இணைக்கும் வகையிலேயே இந்த வலைத்தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது வசதிக்கேற்ப கணினி, சிமார்ற் போன், ஐ-போன்களிலும் பயன்படுத்தக் கூடியவாறும் வெப்பேஜ், பேஸ்புக், இன்ஸ்டகிராம், டுவிற்றர்தளம் போன்றவற்றிலூடாகவும் தகவல்களை அனுப்பக்கூடியவாறும் இலகுபடுத்தப்பட்டுள்ளது.