நாளை தொடக்கம் யாழ்ப்பாணத்தில் உலருணவுப் பொருள்கள் விநியோகம்

IMG 5816
IMG 5816

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கும் உதவித் திட்டம் அரசினால் நாளை காலையிலிருந்து முன்னெடுக்கப்படவுள்ளது என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் விவரம் அந்தந்த கிராம சேவகர் ஊடாக திரட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது கோதுமை மா மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக இடர் முகாமைத்துவபிரிவிற்கு கிடைத்துள்ளது.

அதனால் நாளை காலை முதல் பிரதேச செயலர்கள் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.